மேலைத்தேய நாட்டு பாடசாலைகள்



20ம் நூற்றாண்டு முழுவதும் பாடசாலை கல்வி முறையில் அடிப்படையான மாற்றங்கள் ஏற்படவில்லை. வளர்முக நாடுகளிலும் சரி வளர்ச்சியடைந்த நாடுகளிலும் சரி இதுவே நிகழ்கிறது. சகல நாடுகளிலும் மாணவர் சேர்வு அதிகரித்தது. சகல பின் தங்கிய பிரிவினரும் பாடசாலைகளில் உள்வாங்கப்பட்டமையே ஒரு முக்கிய வளர்ச்சி ஆயினும் பாடசாலை கல்வியில் மாற்றம் எதுவும் இடம்பெறவில்லை.1-12 ஆண்டுகள் வரையான ஆரம்ப கல்வி இடைநிலைக் கல்விஇ உயர்நிலைக் கல்வி பின்னர் உயர்கல்வியானது பல பாடங்களாக பிரிக்கப்பட்டு சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அப்பாடங்களை கற்பிப்பவர்களாகவூம் மாணவர் தேர்ச்சியை அறிய தேசிய ரீதியிலான பொது பரீட்சைகள் என கல்வித்திமிட்டமிடல்கள் காணப்படுகின்றன. எனவே இவ்வாறாக பாடசாலையின் கல்வி முறை காணப்பட்டது. பாடசாலைகள் பெரிய அளவில் மாற்றங்களுக்கு உள்ளாவதில்லை. பாடசாலை கல்வியை முடித்த மாணவர் ஒருவர் 50 ஆண்டுகளுக்கு பின்னர் அதே பாடசாலைக்கு சென்றால் சில புதிய கட்டடங்கள் திருத்தப்பட்ட கட்டடங்கள் தவிர்ந்த ஏனைய மாற்றங்களை காண முடியாது. உலகிலும் சமூகத்திலும் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்தாலும் பாடசாலைகளில் அவை பொதுவாக பிரதிபலிப்பதில்லை. இதன் காரணமாக பாடசாலை முறையானது மாற்றத்தை விரும்பாத பழமை பேணும் நிறுவனம் என்ற பெயரை பெற்றுள்ளது. 1950 தொடக்கம் கணினி பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. அதே வேகத்தில் பாடசாலை கல்வி முன்னேற்றம் கண்டிருந்தால் 1 தொடக்கம் 12 ஆண்டு கல்வியை 10 நிமிடங்களில் வழங்கிவிட முடியும் என்ற ஒரு கருத்தும் காணப்படுகின்றது. எவ்வாறாயினும் பல மாற்றங்கள் கல்வித் துறையில் ஏற்பட்டு வருவதையூம் மறுக்க முடியாது உள்ளது. வளர்ச்சி அடைந்த நாடுகள் பலவற்றில் ஏற்பட்டுள்ள பாடசாலை மாற்றங்களை ஆய்வாளர்கள் இனங்கண்டுள்ளனர். இவை வளர்முக நாடுகளில் உள்ள கல்வித்துறை ஆய்வாளர்களுக்கு பயன் உடையதாகும் என கடந்த காலங்களில் மேலை நாட்டு கல்வி சிந்தனைகளும், கல்வித்துறை மாற்றங்களும்இ கீழை நாடுகளின் கல்வித் துறை சீர்திருத்த செயற்பாட்டில் செல்வாக்கு செலுத்தி வந்துள்ளன. காலனித்துவ காலத்தில் ஆட்சியாளர்கள் கல்வித் துறையில் மாற்றங்களை ஏற்படுத்திய போதெல்லாம் தமது தாய்நாட்டின் கல்விச் சிந்தனைகள்ல் செல்வாக்குக்கு உள்ளாயினர். உள்ளூமக்களின் ஆலோசனையூம் அனுமதியும் இன்றியே மேலை நாட்டு கல்விச் செயற்பாடுகள் இறக்குமதியாயின. ஆனால் சுதந்திரம் பெற்ற பின்னர் நாட்டு கல்விமுறையில் காணப்பட்ட பல காலனித்துவ அம்சங்களை அகற்றப்படலாயின எவ்வாறாயினும் அண்மைக்காலங்களில் இந்நாடுகளில் கல்விக் கொள்கை வகுப்பாளர்கள் மேலை நாடுகளின் கல்வித் துறையில் காணப்படும் மிகச் சிறந்த செயற்பாடுகளை இனங்கண்டு அவற்றைச் செம்மைப்படுத்தி அறிமுகம் செய்தவர்களாக காணப்படுகின்றனர்.


 மேலைநாட்டு பாடசாலைகளின் இயல்புகள் 
  •  பல மேலைநாட்டு பாடசாலைகள் சுய ஆட்சித் தன்மை கொண்டனவாயூள்ளன. அதாவது தமக்கு தேவையான நிதியை தாமே திரட்டிக் கொள்ளவூம் அனுமதிக்கப்படுகின்றன. 
  • உலக வங்கியின் ஆலோசனையின் பேரில் இன்று வளர்முக நாடுகளும் பாடசாலை மட்ட முகாமைத்துவம் அல்லது பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டம் என்ற பெயரையே சுய ஆட்சித் தன்மையூடைய பாடசாலைகள் விருத்தி செய்ய முற்பட்டுள்ளன. 
  • பாடசாலைகள் அரசாங்கத்தின் பல மட்டங்களில் இருந்து நிதியூதவி பெறுகின்றன. அதற்கு பிரதியூபகாரமாக பாடசாலைகள் சில முக்கியமான அறிவுத் தொகுதிகளையூம் கற்பிக்க வேண்டும்.
  •  ஒரு பிள்ளையானது பாடசாலையில் சேரும் போது பிள்ளைக்கான பண ஆளணி வழங்கப்படுகிறது. 
  •  பாடசாலைகள் தனியார் பாடசாலைகளும் தமக்கு தேவையான அலுவலர்களை தாமே தெரிவு செய்து கொள்கின்றன. கல்வி போதனையிலும் கற்றல் செயற்பாடுயிலும் ஈடுபட்டுள்ள யாவரும் ஆசிரியர்கள் என அழைக்கப்பட மாட்டார்கள். பெரும்பாலான ஊழியர்கள் ரொம்ப ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியாற்றுகின்றனர். ஒப்பந்தங்களின்படி குறித்த விலைக்கு அவர்கள் குறித்த சேவையை வழங்குவர் புதிய தொழில் வல்லுநர்கள் சம்பளம் பெற மாட்டார்கள். ஒப்பந்த அடிப்படையிலேயே தொழில் புரிவார். பாடசாலையில் நிரந்தரமான தொழில்களை செய்ய மாட்டார்கள். 
  •  பாடசாலைகள் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கட்டிடங்களில் நடாத்தப்படுகின்றன. தொழில் நிறுவனங்களால் கட்டப்பட்டு பாடசாலைக்கு குத்தகைக்கு விடப்படும் கட்டடங்கள் அதிகமாகி வருகின்றன.
  •  பாடசாலைகள் தனித்து இயங்காது வெவ்வேறு தொடர்புகள் இடைத்தாக்கங்களின் ஊடாக வேலை தொகுதிகளையூம் ஏற்படுத்திக்கொள்ளலாம். ஏனைய பாடசாலைகளுடன் முறையான தொடர்புகளை கொள்ளவூம் தொடர்புகள் பள்ளி ஊடகம் மூலமானதாக அமையம். 
  •  பாடசாலைகள் மாணவர்களை பெற்றுக்கொள்ள பயனற்ற போட்டிகளில் ஈடுபடக்கூடாது.
  •  மேலைத்தேய நாடுகளிலுள்ள அதி சிறந்த பாடசாலைகள் உலகலாவிய ரீதியில் உள்ள அதி சிறந்த பாடசாலைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும.; 
  • அப்பாடசாலைகள் வெளிநாடுகளில் உள்ள வளங்களையூம் தம் பாடசாலைகளுக்குள் உள்வாங்கிக் கொள்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபடும். 
 மேலைநாடுகளில் இல்லங்களும் பாடசாலைகள் ஆக மாறி வருகின்றன. பல்வேறு பாடசாலைகளுக்காக பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப விரும்பாத பெற்றௌர் தமது வீடுகளில் வைத்து அவர்களுக்கு கல்வி வழங்குகின்றனர். அதற்கு பாடசாலை பாடத்திட்டத்தையும் போதனாசிரியர்களையூம் பயன்படுத்துகின்றன.

 மேற் குறிப்பிட்ட மாற்றங்கள் சட்ட தீவிரமானதாக இருந்த போதிலும் அவை கல்வி முறைகளில் ஏற்கனவே வந்து படிந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இவை யாவூம் முற்றாகவே இலங்கைக்கு பொருத்தமற்றவை என கூற முடியாது. இவற்றின் சில அம்சங்கள் ஆவது இலங்கையின் கல்வி ஏற்பாடுகளில் படிந்துள்ளமையை பற்றி சுட்டிக்காட்ட முடியூம்.

No comments

Powered by Blogger.